Saturday, June 14, 2014

'ஆ'மயம் 10 - சினிமா (எ) சாத்தான்காரர்கள்


ஜப்பானில் ஸ்டுடியோவில் பெரும்பாலும் இரவு நேர ஷூட்டிங்தான் போய்க்கொண்டிருந்தது... சீர் என்றால் அப்படி ஒரு சீரான அமைப்பு அந்த ஸ்டுடியோ க்ரியேச்சூரில். இரவு 11 மணி முதல் காலை 8 மணி வரை ஃப்ளோர் எங்கள் வசம். இரவு 10:55க்குதான் ஃப்ளோர் சாவி கையில் கொடுக்கப்படும்... உள்ளே செல்லும்போது, நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கும் பொருட்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. குண்டூசியானாலும் சரி, X-Ray Machine ஆனாலும் சரி, புத்தர் சிலையானாலும் சரி... அது எவ்விடத்திலிருக்கிறதோ அதை ஃபோட்டோ எடுத்து வைத்து கொள்ள வேண்டும். காலை மீண்டும் ஃப்ளோரை ஒப்படைக்கும்பொழுது.. அந்தந்த பொருட்களை அதே இடத்தில் (ஃபோட்டோவை பார்த்து) அடுக்கி வைத்துவிட்டு.. சுத்தமாக அறையை காலி செய்து 7:55க்கு சாவியை திருப்பி கொடுத்துவிட வேண்டும். இதில் கொஞ்சம் பிசகினாலும், வாடகை கூட்டப்படும், பொருட்களின் சேதாரத்திற்கேற்ப ஃபைன் போடப்படும்.

FUMIKO MASE

இந்த விதிமுறைகள் எல்லாம் பயமுறுத்துவதற்காக அல்ல... வேலை சுத்தமாக இருக்க மட்டுமே.. எனவே இதை பின்பற்றுவதில் தவறொன்றுமில்லை.. காரணம், நாங்கள் சென்னையில் ஒரு பிரதான பகுதியில் இருக்கும் ஒரு ஸ்கூலை ஷூட்டிங்கிற்கு கேட்டபோது, சினிமாக்காரர்கள் எல்லாம் சாத்தான்கள்.. அவர்களுக்கு ஸ்கூல் கொடுக்கூடாது.. என்று கூறினார்கள். எங்களுக்கு அவமானமாகிவிட்டது.. ஏன் இப்படி கூறுகிறீர்கள் என்று கேட்க, ஏற்கனவே அந்த ஸ்கூலை ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஷூட்டிங்கிற்கு கொடுக்கவும், அவர்கள் ஷூட்டிங் நடத்தியபோது, அவ்விடத்தை போதுமானளவிற்கு சேதாரம் விளைவித்து, அசுத்தம் செய்துவிட்டு போயிருப்பதே இவர்களின் சாத்தான் பயத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படது. எனவே, மேலே சொன்ன விதிமுறைகள் ஒருவகையில் நம்மை சாத்தானாக்காமல் காப்பாறும் வல்லமை படைத்தது...

Knock Knock - Its a wrong Door
நாங்கள் புக் செய்திருந்த ஃப்ளோர் அந்த பில்டிங்கின் கடைசி மாடிக்கு ஒரு அடுக்கு கீழே இருந்தது... எங்கள் கேமிராமேன் இரவு இடைவேளையில் சுமார் 2:30 மணிக்கு ப்ரேக் முடித்துவிட்டு ஷூட்டிங் ஃப்ளோர்தான் என்று தப்பாக நினைத்து ஏதோ ஒரு ஃப்ளோரை தட்ட.. அறைக்கதவை ஒரு சுமோ மனிதர் (ஜப்பானிய மல்யுத்த குண்டு வீரர்) திறந்திருக்கிறார்.


அவர் கண்களில் அப்படி ஒரு தூக்கம கலைந்த கோபம் கொப்பளித்திருக்கிறது. 'என்ன' என்று கேட்க.. சதீஷ் (கேமிராமேன்) பணிவாக ஷூட்டிங் என்று கூறியிருக்கிறார். அவர், 'ஸ்டுடியோ கீழே' என்று கோபமாக கைகாட்டிவிட்டு கதவை படார் என்று கோபத்துடன் சாத்திவிட்டு ஏதோ புலம்பியபடி போயிருக்கிறார்... ஒரு நிமிடம் அவர் தன்னை தொடைபிடித்து தூக்கி மல்யுத்த ஸ்டைலில் படிகளில் உருட்டிவிட்டுவிடுவாரோ என்று பயந்ததாக பிறகு சதீஷ் தெரிவித்தார்...

Image Courtesy : http://www.akiodesigns.com

(தொடரும்)


Signature

1 comment:

kalidasganesh said...

hareesh sir antha pulambal thaan enna ?

Popular Posts