Saturday, March 31, 2012

எண்ணத்திரை : ['ARTIST'-ம் அம்புலியும்]

டிஸ்கி : இனி 'எண்ணத்திரை' என்ற தலைப்பில் மனதில் எழும் எண்ணங்களை பகிரவும் பதியவும் விருப்பம் கொண்டு, இன்று முதல் துவங்குகிறேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...



சென்ற வாரம் 'தி ஆர்டிஸ்ட்' படம் பார்த்தேன்... வசனங்களற்ற வண்ணங்களற்ற வலியான கதை. மெல்லிய இறகால் வருடுவதைப்போல் சொல்லியிருந்தார்கள். ஆனால் அந்த இறகை அனுபவிக்க விடாமல் காதைக்குடைந்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு அந்நிய நண்பர்கள் இருவர்... குடித்துவிட்டு வந்து அனியாயத்துக்கு புலம்பிக் கொண்டிருந்தார்கள்... தங்கள் பணம் தண்டம் என்றும், தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டோம் என்றும், ஒன்றுமே புரியவில்லை என்று தன்னிலை மறந்து புலம்பிக்கொண்டிருக்க... எனக்கும் என்னைச்சுற்றி அமர்ந்திருந்த அனைவருக்கும் வெறுப்பாய் இருந்தது... எனக்கு வருங்காலத்தில் போஜனம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை என்று அவர்களிடம் 'சார் படம் புடிக்கலைன்னா வெளியே போய் வேற படத்துக்கு டிக்கெட்-ஐ மாத்தி கேளுங்க கொடுப்பாங்க' என்று பொய் சொன்னேன்... கிளம்பிச் சென்றார்கள்... வரவேயில்லை... என்ன ஆனார்களோ தெரியவில்லை..

நாங்கள் 2010ஆம் ஆண்டு எங்கள் சொந்த நிறுவனமான 'ஷங்கர் பிரதர்ஸ்' தயாரிப்பில் 'அம்புலி' படத்தை ஆரம்பித்து Basic டிஸ்கஷன் ஆரம்பித்தபோது அம்புலியை Black and Whiteல் எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். 


அஜய் மற்றும் ஸ்ரீஜித்-தை வைத்து...
Black and Whiteல் நடத்தப்பட்ட முதல்கட்ட ஃபோட்டோ ஷூட்-ல்
எடுத்த புகைப்படங்கள் இதோ...









வியாபார ரீதியாய் ஏற்படும் குழப்பங்களையும் சந்திக்க தயாராகவே இருந்தோம். நண்பர் சதீஷ் 3Dக்கு எடுத்துக் கொண்ட பயிற்சி பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது 3Dயில் படம் எடுக்க  ஒரு ஸ்க்ரிப் தயார் செய்யும்படி கூறினார்... உடனே அம்புலி கதையில் கிராமத்தில் நடக்கும் நிலவு நேர காட்சிகள் அனைத்தும் 3D'யில் செய்தால் எப்படியிருக்கும் என்று தோன்ற... அதற்கான சோதனை ஒளிப்பதிவு செய்துப் பார்த்தோம். அதில் 3D காட்சிகள் அற்புதமாக வந்திருந்தது... உடனே அம்புலியை 3Dயிலேயே எடுக்கலாம் என்று முடிவானது... பிறகு படத்தை KTVR CREATIVE REELS சார்பில் எங்களது தயாரிப்பாளரான KTVR லோகநாதன் அவர்கள் தயாரிப்பதாய் முடிவானதும் Black and White எண்ணத்தை கைவிட்டோம். நண்பர் ஹரியும் 'நாம் சொந்த தயாரிப்பில் சோதனைகள் செய்து பார்க்கலாம்... அடுத்தவர் பணத்தில் அதை செய்ய வேண்டாம்' என்று கூறவே அனைவரும் ஒருமனதாக Black and White எண்ணத்தை ஒத்திவைத்தோம் (கைவிடவில்லை).

ஆனால் Black and Whiteல் எடுத்திருந்தால் இங்கு எப்படியோ தெரியவில்லை... ஆர்டிஸ்ட் படம் ஆங்கிலத்தில்(?) போதுமான அங்கீகாரம் மட்டுமில்லாமல் ஆஸ்கார் வரை சென்று வென்றும் இருக்கிறது... இதுநிச்சயம் பெரிய விஷயம்தான்..!!!


Signature

Thursday, March 29, 2012

நான் க்ளிக்கியது [ஆல்பம்]





யாருமில்லா இடத்தில் இயற்கையும் நானும்...

--------------------------------------------------------------------------------------------------



வாயில்லா ஜீவனின் சிரிப்பில் மட்டும் ஜீவனிருக்கிறதே...?

--------------------------------------------------------------------------------------------------





வாழமறந்த மனிதன் குடிலில் மீண்டும் ஒரு குட்டிக்காடு...

--------------------------------------------------------------------------------------------------



இயற்கையிடமிருந்து மனிதைக்க காக்கவா இல்லை மனிதனிடமிருந்து இயற்கையை காக்கவா... வேலி யாருக்கு..?

--------------------------------------------------------------------------------------------------




காலை வெய்யில் நீரில் நிகழ்த்திய கணநேர ரசவாதத்தால்... வெள்ளியோ, பவளமோ, வைரமோ  என்று ஏமாறச்சொன்னது எமரால்டு ஏரி...

--------------------------------------------------------------------------------------------------





Signature

Friday, March 23, 2012

திருட்டுச்சந்தைக்கு எதிராய் 3D திரைப்படம்


இன்று சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துக் கொண்டிருக்கும் கரையான் திருட்டு விசிடி/டிவிடி/ப்ளூ ரே/டோரண்ட் டவுண்லோடுகள்தான்...

ஒரு படம் வெளிவந்த அடுத்த நாளே சில இணையதளங்களில் சுடுச்சுட இலவசமாக ஆன்லைனில் காணும் வசதி வந்துவிடுகிறது... டவுண்லோடும் செய்து கொள்ளலாம்... அதை டவுண்லோடு செய்து சில நல்லவர்கள் சுடச்சுட டிவிடியும் போட்டுவிட்டு சந்தையில் புழக்கத்திற்கு விட்டுவிடுகிறார்கள்....

18 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்குள் ஒரு டிவிடி, சந்தையில் கிடைத்துவிடுகிறது... இதில் சில விசேஷ திருட்டு வியாபார வல்லுனர்கள் வீட்டிற்கே கொண்டுவந்து ஹோம் டெலிவரி செய்தும் விடுகிறார்கள்... இப்படி இந்த வியாபாரம் அசுரத்தனமாய் வளர்ந்துள்ளது... யாரையும் குறிப்பிட்டு குறைகூறுவதற்கல்ல...

இந்நிலையில் எங்கள் அம்புலி திரைப்படத்தை முதல் வாரம் 3Dயில் மட்டுமே  சுமார் 130 திரையரங்குகளில் வெளியிட்டிருந்தோம்... முதல் வாரம் ரிசல்ட் நன்றாக இருக்கவே, இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் நம் படத்திற்கு 7 கூடுதல் திரையரங்குகள் கிடைத்தது... அதுவும் நாங்கள் வெளியிட்ட முதல்தர போலாரைஸ்டு 3Dக்குத் தேவையான மாற்றங்ளுக்கு ஒப்புக்கொண்ட 4 திரையரங்குகள் உட்பட... இதனால், 2ஆம் வாரம் திரையரங்குகளில் மக்கள் குடும்பம் குடும்பமாக வர ஆரம்பித்தார்கள், குறிப்பாக குழந்தைகள் பட்டாளத்தை அதிகம் அரங்குகளில் காணமுடிந்தது... இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரம் நாங்கள் வெளியிட்ட திரையரங்குகள் அனைத்திலும் போலாரைஸ்டு மற்றும் ஆனாக்ளிஃப் என்ற இரண்டு ஃபார்மெட்டிலும் 3Dயில் மட்டுமே படத்தை வெளியிட்டிருந்ததால் திருட்டுச்சந்தைக்கு எதிரான போரில் அம்புலி வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்...

நாங்கள் படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் வியாபார டிசைன்களை வடிவமைக்கும்போது, படத்தின் திருட்டு டிஸ்க் வரவில்லையெனில், கீழ்காணும் விளம்பரத்தை 2ஆவது வார தொடக்கத்தில் (2ஆவது வெள்ளியன்று) வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தோம்...



ஆனால் இந்த விளம்பர டிசைனை உங்களால் வெளியிட முடியாது, உங்கள் படத்தின் டிஸ்க் நிச்சயமாய் வெளிவந்துவிடும் என்று எங்கள் குழுவுக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள்...

ஆனால், 'அம்புலி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 36 நாட்களாகிறது.. இதுவரை தெளிவான ப்ரிண்ட் அல்லது 5.1 ப்ரிண்ட் என்று திருட்டுச்சந்தையில் புழங்கும் வார்த்தையில் சொல்லக்கூடிய சுத்த ப்ரிண்ட்டுகள் வெளிவரவேயில்லை...

இதுவரை இண்டர்நெட்டில் வெளியாகியிருக்கும் அம்புலியின திருட்டுப்ரிண்ட்டின் ஸ்க்ரீன்ஷாட்டுகள் இதோ...  இதுதான்...




இது போல் மழுங்கலான இரட்டைப் பிம்பங்களை எந்த மனிதராலும் 10 நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியாது... நல்ல தரத்தை எதிர்பார்க்கும் உண்மையான சினிமா விரும்பிகள் இதை பார்க்கவும் மாட்டார்கள்... அதையும் மீறிப் பார்ப்பவர்களுக்கு இது இண்டர்நெட்டில் இலவசமாகத்தான கிடைக்கிறது கூகிளாரை கேட்டு பார்த்துக் கொள்ளலாம்...

திருட்டு டிவிடியில் தெளிவான ப்ரிண்ட் வெளிவராமலிருப்பதற்கு 2 முக்கிய காரணங்கள்
1. அம்புலி திரைப்படத்தை 3Dயில் மட்டுமே வெளியிட்டது
2. கேபிள் சங்கர் அவர்களின் 'சினிமா வியாபாரம்' புத்தக உத்திகள்

முதல் காரணத்திற்காக, எங்கள் தயாரிப்பாளரான திரு.கே.டி.வீ.ஆர். லோகநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்... காரணம், அவர் நினைத்திருந்தால் கூடுதல் வருமானம் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிக திரையரங்குகளில் 2Dயிலும் இப்படத்தை வெளியிட்டிருக்க முடியும்... 2D திரையரங்குக்காரர்கள் படத்தை கேட்கவும் செய்தார்கள்... ஆனால் அவர் அப்படி செய்யவில்லை... அவரது துணிவு, இப்படத்தை மக்கள் சில நாட்களுக்கு 3Dயில் மட்டுமே கண்டு களிக்கட்டும்... படத்திற்கான டிமாண்ட் சில நாட்களுக்காவது நிச்சயம் இருக்கும், அப்போது சாவதானமாக 2Dயில் விட்டுக் கொள்ளலாம் என்று ஸ்திரமாய் நம்பினார்...

இரண்டாவது காரணத்திற்காக, கேபிள் சங்கர் அவருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்... அவரது "சினிமா வியாபாரம்" புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல் படத்தி்ற்கான வெளிநாட்டு உரிமையை (2Dயில்) கொடுத்திருந்தால் இந்நேரம் தட்டு ரெடியாக இருந்திருக்கும்.. அவர் அந்த புத்தகத்தில் விளக்கியிருந்த சில உத்திகளை தெரிந்துக் கொண்டதில், 3Dயில் மட்டுமென்றால் வெளிநாடுகளில் உடனே வெளியிடலாம், இல்லையெனில் 2Dயை இப்போது வெளியிட வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்துக் கொள்ள அவரது புத்தகம் வழிவகுத்தது...

தமிழ் சினிமாவின் எதிர்காலம் 3Dதான் என்று நான் கூறவில்லை.. சில காலமாவது 3D படங்கள் தொடர்ந்து வந்தால், மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பத்தோன்றுகிறது... அம்புலி போன்ற புதுமுகங்களை வைத்து எடுத்த 3D படத்திற்கே மக்கள் இந்த ஆதரவு கொடுத்தபோது, பெருநட்சத்திரங்களின் படங்கள் 3Dயில் வந்தால் மக்கள் நிச்சயம் திருவிழாவாய் கொண்டாடுவார்கள்...  நாமும் தியேட்டர்களுக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவோம்...


Signature

Monday, March 19, 2012

"அம்புலி 3D" : விமர்சனக்கோவை


நண்பர்களுக்கு வணக்கம்,


அம்புலி வெளியாகி வெற்றிகரமாக இன்று 32வது நாள்... பரீட்சைக் காலத்திலும் அம்புலி நன்றாக போய்க்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் குழந்தைகள்... நண்பர்கள் பலரும் ஃபோன் செய்யும்போது அவரவர் வீட்டுக் குழந்தைகள் அம்புலியைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிப்பதாய் தெரிவித்தார்கள்... உச்சக்கட்டமாய் பெரம்பூரைச் சேர்ந்த எனது தந்தையின் நண்பர் அமரவாணன் என்பவரின் குழந்தை தனது பெயரை 'ஆர்த்தி'யிலிருந்து 'அம்புலி' ஆர்த்தி என்று மாற்றிக் கொள்ள விரும்பி அடம்பிடிப்பதாய் புலம்பினார்... தாங்க்ஸ் அம்புலி ஆர்த்தி...!



படத்தை பார்த்த நண்பர்கள் பலரும் நிறைகளை நிறையவே சொல்லியும் குறைகளை கூடுமானவரை பக்குவமாயும் எடுத்துரைத்தனர்...



A, B, C என்று அனைத்துத் தரப்பிலும் படம் சென்றடைந்திருப்பதாக எங்கள் அலுவலக அக்கௌண்டன்ட் எடுத்துரைத்தார்... மகிழ்ச்சி..!



அம்புலி குறித்து வெளியான ஆஹா ஓஹோ என்ற விமர்சனங்களும்... அய்யய்யே..! சே..! த்தூ..! போன்ற விமர்சனங்களும் எல்லாம் வந்தாகிவிட்டது... இதுவரை நான் பதிவெழுதாததற்கு முக்கியக் காரணம்... படம் வருவதற்கு முன்பு அதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சுயவிளம்பரம் செய்யலாம். ஆனால் படம் வெளிவந்ததும் அந்தப்படத்தின் தரம்தான் விளம்பரம்... அது பார்வையாளர்களின் வழியே பரவும் வாய்வழி விளம்பரம்... அந்த வகையில் 'அம்புலி 3D' படத்திற்கு மிக நல்ல Mouth Publicity கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..!



எனது எழுத்துப்பயிற்சி பதிவுலகிலிருந்து தொடங்கியதால், பதிவுலகில் நம் படம் எப்படி பேசப்படுகிறது என்ற ஆவல் எனக்கு தனிப்பட்ட முறையில் படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே இருந்து வந்தது...



பதிவுலக நண்பர்கள் 'அம்புலி'யை விமர்சித்து எழுதிய பதிவுகளை முடிந்தவரை திரட்டியிருக்கிறேன்... இவை தவிர உங்களுக்கு தெரிந்து வேறு விமர்சனங்கள் இருந்தாலும் தெரிவியுங்கள்...



கேபிள் சங்கர் http://www.cablesankaronline.com/2012/02/3.html

ரிலீசுக்கு முன்பே படத்தைப் பார்க்க கேபிளாரைஅழைத்திருந்தேன்... அவரும் குடும்பத்துடன் வந்து சத்யம் ப்ரீமியரில் கலந்துக் கொண்டார்..! நன்றி ஜி..!



ரஹும் கஸாலி http://www.rahimgazzali.com/2012/02/ampuli-3d-review.html

அரசியல் பதிவுகளுக்கு மிகவும் பிரசித்தமான நண்பர் ரஹும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி பாராட்டினார்..! அவருடன் சேர்ந்து படம் பார்த்த மற்ற புதுக்கோட்டை நண்பர்களையும் டெலிஃபோனில் பேச வைத்தார்... அவருக்கும் இந்நேரத்தில் மிக்க நன்றி..!


குறும்புகள் ரகு http://www.kurumbugal.blogspot.in/2012/02/3d.html

என் நெருங்கிய நண்பர்... நான் BPOவில் பணிபுரியும்போது இவரும் என் சக ஊழியர். பணி இடைவேளைகளில் நானும் இவரும் நள்ளிரவு 1.30மணிக்கு எடுக்கும் ப்ரேக்கில் என் கதைகளை கேட்டுக் கொண்டே தூக்கம் தொலைப்பவர். கதையை கேட்டதோடல்லாமல், ஊகத்தோடு ஊக்கத்தொகையும், நட்புக்கரத்தோடு கரண்ஸியும் கொடுத்து என் முதல் குறும்படத்திற்கு தயாரிப்பாளராய் மாறியவர். இவருக்கு இந்த பதிவின் மூல(மு)ம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் திரைப்படங்களுக்கு நண்பனாய் மட்டுமில்லாமல் நடுநிலை விமர்சனங்கனாய் எழுதுவது எனது எதிர்ப்பார்ப்புக்குறியது...


எழுத்தாளர் சுப்ரஜா http://www.nanumcinemavum.blogspot.in/

சமீபத்தில் அறிமுகமான இவர் மிக நல்ல நண்பர்... படத்தை பார்த்து பாராட்டியதோடு தன்னுடைய குருநாதர் (எனக்கு மிகவும் பிடித்த இயக்குநரான ஸ்ரீதர் சார்) அவர்களின் படத்தோடு சில காட்சிகளை ஒப்பிட்டு கூரியதில் மெய் சிலிர்த்தது...! ரொம்ப நன்றி சார்..!



உண்மைத்தமிழன் http://truetamilans.blogspot.com/2012/02/3-d.html

பத்திரிகை நண்பர்களுக்கான பிரத்யேக காட்சியில்தான் இவரை சந்தித்தேன்... தானும் ஒரு பதிவர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்... இவரது வலைப்பூவின் பெயைரக் கேட்டதும்... 'நீங்கதானா அது..' என்று நான் காட்டிய ஆச்சர்யத்தை அவர் படத்தைப் பார்த்து என்னிடம் காட்டினார்... அப்போதே பாராட்டி... அன்றே பேட்டி பதிவு செய்து... உடனே தன்னுடைய சேனலில் (NDTV HINDU) அம்புலி குறித்த செய்திகள் வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்...



'மெட்ராஸ்பவன்' சிவகுமார்

நான் முதல் வாரம் அம்புலி குழுவுடன் தியேட்டர் ரவுண்ட்ஸ் போகும்வழியில் ஒரு ஃபோன் வந்தது... 'தன்னை சிவகுமார் என்று அறிமுகம் செய்துக் கொண்ட ஒரு பதிவர்... இதற்கு முன் தனக்கு த்ரில்லர் வகையில் தமிழில் பிடித்த படம் 'அதே கண்கள்'தான் எனவும், அதன் பிறகு 'அம்புலி'தான் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறி மனம் நெகிழ வைத்தார்...' அவர் எழுதிய அம்புலி விமர்சனம் இதோ... http://www.madrasbhavan.com/2012/02/3d.html



கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் சில பதிவர்களுக்கு நான் Passive Reader... நான் விரும்பி படித்த பதிவர்களும் சில புதியவர்களும் (எனக்கு) அம்புலி படத்துக்களித்த விமர்சனம் இதோ...


சி.பி. செந்தில்குமார் http://www.adrasaka.com/2012/02/3_19.html

'யாவரும் நலம்' வெங்கட் http://www.yaavarumnalam.com/2012/02/3d.html

'லக்கிலுக்' யுவகிருஷ்ணா http://www.luckylookonline.com/2012/02/blog-post_21.html

'பிலாஸஃபி' பிரபாகரன் http://www.philosophyprabhakaran.com/2012/02/3d.html

'வாங்க ப்ளாகலாம்' அனந்து http://pesalamblogalam.blogspot.in/2012/02/blog-post_19.html

'தகவல் களஞ்சியம்' கார்த்திக் http://atozthagavalkalangiyam.blogspot.in/2012/03/3.html

'வீடுதிரும்பல்' மோகன் குமார் http://veeduthirumbal.blogspot.in/2012/03/79.html



நண்பர் ரஹும் அம்புலி பற்றிய விமர்சனத்தை மற்றும் போட்டதோடல்லாமல் இமெயில் மூலமாய் சில கேள்விகளையனுப்பி அதற்கான விடைகளை தொகுத்து எனது பேட்டியையும் வெளியிட்டார்...

பேட்டி இதோ... http://www.rahimgazzali.com/2012/02/interview-with-ampuli-director-hareesh.html



இவையெல்லாவற்றையும் தாண்டி வழக்கமாக ஒரு படத்தின் தரத்தை மதிப்பிடக்கூடிய சினிமா சம்மந்தப்பட்ட இணையதளங்களில் வெளியான அம்புலியின் சில முக்கிய விமர்சனங்கள் இதோ..!



Behindwoods

"Ambuli is definitely a pioneer in Tamil Cinema. It has the grip of a thriller and the charm of a grandmother’s tale or folklore..."



Indiaglitz

"Call it a visual treat and a unique experience for the audience. One gets the feeling that the entire story unfolds almost in front of him /her! To Tamil audience for whom 3D films would mean those from Hollywood, here comes 'Ambuli'..."



Galatta

"Director duo Hari Shankar and Hareesh Narayan, who amazed us with their technical brilliance in Orr Iravu, is once again back with yet another supernatural thriller titled Ambuli. This is in fact a good 3D watch for Kollywood fans..!"



தினத்தந்தி

"3டி தொழில்நுட்பத்துடன் கூடிய மிரட்டலான படம் அம்புலி..."



குங்குமம்

"ரசிகர்களின் எந்த கணிப்பையும் தாண்டிவிடும் கதைப் பின்னல் இயக்குநர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றிகள்..."



விகடன்

40/100... கதை நடக்கும் காலம், இரவு நேர 3டி எஃபெக்ட், திகிலூட்டும் பின்னனி இசை ஆகியவை அம்புலியை ரசிக்க வைக்கிறது...



அம்புலி பற்றி மேலும் தகவல்களுக்கு...

http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.blogger.com/goog_814074263


http://www.youtube.com/ambuli3d



அங்கிங்கென்று எங்கும் அம்புலி அலை சுனாமியளவுக்கு இல்லையென்றாலும் சுமாரான அளவில் நல்லமுறையில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது என்ற திருப்தி...



இனி பதிவுகள் எழுத தொடரலாம் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் நான்...



அன்புடன்

ஹரீஷ் நாராயண்


Signature

Popular Posts